கோவை: கோவையில் அதிக போதை காரணமாக சாக்கடையில் விழுந்த நபர் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை: கோவையில் அதிக போதை காரணமாக சாக்கடையில் விழுந்த நபர் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை நரசிம்மநாய்க்கன் பாளையம் ஹரிஜன் காலனி பகுதியை சேர்ந்தவர் ரத்தின சிகாமணி(53). இவர் அப்பகுதி பஞ்சாயத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.
இந்நிலையில், கடந்த 1ம் தேதி அதிக அளவு மது அருந்தியவர் புதுப்பாளையம் காந்தி நகர் சாக்கடை கால்வாயில் தவறி விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் காயங்களுடன் வீட்டிற்கு சென்றவர் அங்கு மரணமடைந்தார்.
இது குறித்து அவரது மனைவி மாரியம்மாள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பெ.ந.பாளையம் போலீசார், அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்குப் பின் ரத்தின சிகாமணியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கோவை நரசிம்மநாய்க்கன் பாளையம் ஹரிஜன் காலனி பகுதியை சேர்ந்தவர் ரத்தின சிகாமணி(53). இவர் அப்பகுதி பஞ்சாயத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.
இந்நிலையில், கடந்த 1ம் தேதி அதிக அளவு மது அருந்தியவர் புதுப்பாளையம் காந்தி நகர் சாக்கடை கால்வாயில் தவறி விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் காயங்களுடன் வீட்டிற்கு சென்றவர் அங்கு மரணமடைந்தார்.
இது குறித்து அவரது மனைவி மாரியம்மாள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பெ.ந.பாளையம் போலீசார், அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்குப் பின் ரத்தின சிகாமணியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.