கோவை: கோவையில் திருமணத்திற்கு ஒதுக்கிய நிதியை கொண்டு கொரோனா தொற்று ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய மணமக்களுக்கு பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கோவை: கோவையில் திருமணத்திற்கு ஒதுக்கிய நிதியை கொண்டு கொரோனா தொற்று ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய மணமக்களுக்கு பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை அடுத்த எலச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித். இவருக்கும் ஈரோடு பள்ளிபாளையத்தை சேர்ந்த செல்வி என்பவருக்கும் இன்று காலை எலட்சிபாளையம் கிராமத்தில் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது.
மணமக்கள் இருவரும் பெங்களூரில் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் பிரமாண்டமாக திருமணம் நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில் கொரோனா காரணமாக திருமணம் தள்ளிப்போனது.
இந்நிலையில், இன்று எலட்சபாளையத்தில் எளிய முறையில் இரு வீட்டாரும் நெருங்கிய உறவினர்களும் மட்டும் கலந்து கொண்டு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், பிரமாண்டமாக திருமணம் நடத்த வைத்திருந்த பணத்தை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு திருமணத்தை முன்னிட்டு நிவாரண பொருட்களை வழங்க மணமக்கள் இருவரும் திட்டமிட்டனர்.

இதனையடுத்து, இன்று காலை திருமணம் முடிந்தவுடன் மணமக்கள் எலட்சிபாளைத்தில் உள்ள ஏழை, எளிய மக்கள் 450 பேருக்கு கொரோனா நிவாரண பொருட்களை வழங்கினர். ஒரு மாதத்திற்கு தேவையான உணவு பொருட்கள் அடங்கிய நிவாரண பையினை புதுமண ஏழை எளிய மக்களுக்கு வழங்கினர். மணமக்களின் இந்த செயலை கிராம மக்கள் வாழ்த்தியபடி நிவாரண பொருட்களை பெற்று சென்றனர்.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை அடுத்த எலச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித். இவருக்கும் ஈரோடு பள்ளிபாளையத்தை சேர்ந்த செல்வி என்பவருக்கும் இன்று காலை எலட்சிபாளையம் கிராமத்தில் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது.
மணமக்கள் இருவரும் பெங்களூரில் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் பிரமாண்டமாக திருமணம் நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில் கொரோனா காரணமாக திருமணம் தள்ளிப்போனது.
இந்நிலையில், இன்று எலட்சபாளையத்தில் எளிய முறையில் இரு வீட்டாரும் நெருங்கிய உறவினர்களும் மட்டும் கலந்து கொண்டு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், பிரமாண்டமாக திருமணம் நடத்த வைத்திருந்த பணத்தை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு திருமணத்தை முன்னிட்டு நிவாரண பொருட்களை வழங்க மணமக்கள் இருவரும் திட்டமிட்டனர்.
இதனையடுத்து, இன்று காலை திருமணம் முடிந்தவுடன் மணமக்கள் எலட்சிபாளைத்தில் உள்ள ஏழை, எளிய மக்கள் 450 பேருக்கு கொரோனா நிவாரண பொருட்களை வழங்கினர். ஒரு மாதத்திற்கு தேவையான உணவு பொருட்கள் அடங்கிய நிவாரண பையினை புதுமண ஏழை எளிய மக்களுக்கு வழங்கினர். மணமக்களின் இந்த செயலை கிராம மக்கள் வாழ்த்தியபடி நிவாரண பொருட்களை பெற்று சென்றனர்.