கோவை காந்திபுரம், சிங்காநல்லூர் பேருந்து நிலையங்களில் இருந்து குறைந்த அளவிலான பயணிகளுடன் ஈரோடு, திருப்பூர், தாராபுரம், சேலம் ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகிறது.
கோவை காந்திபுரம், சிங்காநல்லூர் பேருந்து நிலையங்களில் இருந்து குறைந்த அளவிலான பயணிகளுடன் ஈரோடு, திருப்பூர், தாராபுரம், சேலம் ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்தில் உள்ள 1019 பேருந்துகளில் இன்று முதல் 506 பேருந்துகள் மட்டும் பொது போக்குவரத்திற்காக இயக்கப்படுகின்றன.
காந்திபுரம் பேருந்து நிலையம், காந்திபுரம் நகர பேருந்து நிலையம், சிங்காநல்லூர் பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்து சேவைகள் நடைபெற்று வருகின்றது. கோவையில் இருந்து தாராபுரம், திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர் ஆகிய ஊர்களுக்கு மட்டும் குறைந்த அளவிலான பயணிகளுடன் பேருந்துகள் இயக்கப்படுகின்றது.
அதே வேளையில் மதுரை, திருச்சி, தூத்துக்குடி, இராமநாதபுரம், நெல்லை பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட வில்லை. இதனால் இந்த ஊர்களுக்கு செல்ல பேருந்துகள் இருக்கும் என நினைத்து வந்த பொது மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்தில் உள்ள 1019 பேருந்துகளில் இன்று முதல் 506 பேருந்துகள் மட்டும் பொது போக்குவரத்திற்காக இயக்கப்படுகின்றன.
காந்திபுரம் பேருந்து நிலையம், காந்திபுரம் நகர பேருந்து நிலையம், சிங்காநல்லூர் பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்து சேவைகள் நடைபெற்று வருகின்றது. கோவையில் இருந்து தாராபுரம், திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர் ஆகிய ஊர்களுக்கு மட்டும் குறைந்த அளவிலான பயணிகளுடன் பேருந்துகள் இயக்கப்படுகின்றது.
அதே வேளையில் மதுரை, திருச்சி, தூத்துக்குடி, இராமநாதபுரம், நெல்லை பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட வில்லை. இதனால் இந்த ஊர்களுக்கு செல்ல பேருந்துகள் இருக்கும் என நினைத்து வந்த பொது மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.