கோவை: கோவையில் காற்றின் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இருந்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: கோவையில் காற்றின் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இருந்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியே உள்ள டிரான்ஸ்பார்மரின் மேலே இருந்த மின்கம்பி காற்றின் காரணமாக துண்டாகியது.

அதில் ஒரு பகுதி துண்டாகி தபால் நிலையம் அருகில் விழுந்தது. மற்றொரு பகுதி தொங்கிய நிலையில் வாகனத்தின் டயர் மீது ஒட்டியபடி கிடந்தது.
இதனை கண்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பணியில் இருந்த காவல்துறை மற்றும் ஊர்காவல் படையினர் உடனடியாக தடுப்புகள் அமைத்து அப்பகுதியாக வந்த பொதுமக்களை மாற்று வழியில் செல்லுமாறு அறிவுறுத்தினர். இது குறித்து உடனடியாக மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.
பின்னர் விரைந்து அங்கு வந்த ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்து அதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் வந்து செல்லும் பகுதியில் மின் கம்பி துண்டாகியதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியே உள்ள டிரான்ஸ்பார்மரின் மேலே இருந்த மின்கம்பி காற்றின் காரணமாக துண்டாகியது.
அதில் ஒரு பகுதி துண்டாகி தபால் நிலையம் அருகில் விழுந்தது. மற்றொரு பகுதி தொங்கிய நிலையில் வாகனத்தின் டயர் மீது ஒட்டியபடி கிடந்தது.
இதனை கண்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பணியில் இருந்த காவல்துறை மற்றும் ஊர்காவல் படையினர் உடனடியாக தடுப்புகள் அமைத்து அப்பகுதியாக வந்த பொதுமக்களை மாற்று வழியில் செல்லுமாறு அறிவுறுத்தினர். இது குறித்து உடனடியாக மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.
பின்னர் விரைந்து அங்கு வந்த ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்து அதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் வந்து செல்லும் பகுதியில் மின் கம்பி துண்டாகியதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.