கோவை: கோவையில் மர இயந்திரத்தில் சிக்கி கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை: கோவையில் மர இயந்திரத்தில் சிக்கி கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவையை அடுத்த சூலூர் கலங்கல் சாலையில் உள்ள பொன்னப்பா நகர் பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜ். இவர் ஆதர்ஷ்னா பேக்கேஜ் மில் என்ற மர அறுவை நிறுவனம் நடத்தி வருகிறார். இதில் பேக்கிங் மற்றும் பல்வேறு தேவைகளுக்கான மர பெட்டிகள் தயார் செய்து வருகிறார். இவரது மனைவி கல்பனா(23). இந்தம்பதியினருக்கு பெண் குழந்தை உள்ளது. தற்போது கல்பனா கர்ப்பமாக உள்ள நிலையில் நேற்று கணவருக்கு உதவியாக மர அறுவை மில்லில் உதவியுள்ளார்.

இந்த நிலையில், தர்மராஜ் மற்றும் கல்பனா மரம் இழைக்கும் இயந்திரத்தில் வேலை செய்து கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக கல்பனா அணிந்திருந்த உடை இயந்திரத்தில் சிக்கியது. இதில் நிலை தடுமாறி விழுந்த கல்பனா இயந்திரத்தில் சிக்கியதில் தலை துண்டாகி உயிரிழந்தார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள சூலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கர்ப்பிணி பெண் தலை துண்டித்து உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் அருகில் வசிப்பவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
கோவையை அடுத்த சூலூர் கலங்கல் சாலையில் உள்ள பொன்னப்பா நகர் பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜ். இவர் ஆதர்ஷ்னா பேக்கேஜ் மில் என்ற மர அறுவை நிறுவனம் நடத்தி வருகிறார். இதில் பேக்கிங் மற்றும் பல்வேறு தேவைகளுக்கான மர பெட்டிகள் தயார் செய்து வருகிறார். இவரது மனைவி கல்பனா(23). இந்தம்பதியினருக்கு பெண் குழந்தை உள்ளது. தற்போது கல்பனா கர்ப்பமாக உள்ள நிலையில் நேற்று கணவருக்கு உதவியாக மர அறுவை மில்லில் உதவியுள்ளார்.
இந்த நிலையில், தர்மராஜ் மற்றும் கல்பனா மரம் இழைக்கும் இயந்திரத்தில் வேலை செய்து கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக கல்பனா அணிந்திருந்த உடை இயந்திரத்தில் சிக்கியது. இதில் நிலை தடுமாறி விழுந்த கல்பனா இயந்திரத்தில் சிக்கியதில் தலை துண்டாகி உயிரிழந்தார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள சூலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கர்ப்பிணி பெண் தலை துண்டித்து உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் அருகில் வசிப்பவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.