கோவை: கோவையில் 16 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞரையும், பெண்ணின் தாயாரையும் கைது செய்து பேரூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கோவை: கோவையில் 16 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞரையும், பெண்ணின் தாயாரையும் கைது செய்து பேரூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம் 16 வயது சிறுமிக்கு, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் திருமணம் நடைபெற்று உள்ளது. இந்நிலையில், சிறுமி கர்ப்பம் அடைந்த நிலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்கு வந்த போது சிறுமியின் வயது தெரியவந்தது.
ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் இதுகுறித்து சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் சமூக நலத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் 16 வயது சிறுமியின் கணவர் மற்றும் பெண்ணின் தாயார் ஆகியோரை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர்.
கடந்த பிப்ரவரி மாதம் 16 வயது சிறுமிக்கு, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் திருமணம் நடைபெற்று உள்ளது. இந்நிலையில், சிறுமி கர்ப்பம் அடைந்த நிலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்கு வந்த போது சிறுமியின் வயது தெரியவந்தது.
ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் இதுகுறித்து சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் சமூக நலத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் 16 வயது சிறுமியின் கணவர் மற்றும் பெண்ணின் தாயார் ஆகியோரை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர்.