வட மாநிலங்களில் பயிர்களுக்கு சேதம் ஏற்படுத்தி வரும் வெட்டுக்கிளியா இது? உதகையில் பரபரப்பு..!

நீலகிரி: உதகை அடுத்துள்ள காந்தள் பகுதியில் புதிய ரக வெட்டுக்கிளியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


நீலகிரி: உதகை அடுத்துள்ள காந்தள் பகுதியில் புதிய ரக வெட்டுக்கிளியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த புதிய வகை வெட்டுக்கிளி, வட மாநிலங்களில் விவசாய பயிர்களை அழித்து வரும் வெட்டுக்கிளியா? என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்று அச்சம் நீங்குவதற்க்குள் வட மாநிலங்களில் வெட்டுக்கிளியின் ஊடுருவல் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நாளைக்கு 35 ஆயிரம் பேர் உண்ணக்கூடிய பயிர்களை இவை அழித்து வருகின்றது.

இதனிடையே, உதகை அடுத்துள்ள காந்தள் பகுதியில் வியாபாரிகள் வழக்கம் போல் கடைகளை அடைத்து செல்லும் போது கடை வாசலில் ஒரு வெட்டுக்கிளி தென்பட்டுள்ளது. இது வரை கண்டிராத வெட்டுக்கிளி என கருத்தபட்டு உடனடியாக அதனை ஒரு சிறிய பாட்டிலில் அடைத்து மாவட்ட ஆட்சியருக்கு நேரடியாக தொடர்பு கொண்டு வட மாநிலங்களை அச்சுருத்தி வரும் வெட்டுகிளியா என சந்தேகத்தின் அடிப்படையில் தெரிவித்துள்ளனர்.

இதை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் சம்பந்தபட்ட அதிகாரிகளை ஆய்வுக்கு செய்ய அறிவுறித்தியுள்ளார். இது வட மாநிலத்தில் இருந்து பொருட்களை எடுத்து வந்த லாரிகளில் வந்ததா? எனவும் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

இது சாதாரண ரகமான வெட்டுக்கிளியாக கூட இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும் கோவை வேளாண்மை ஆராய்ச்சி மையத்திற்கு இந்த வெட்டுக்கிளி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகளின் ஆலோசனைக்குப் பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...