வட மாநிலங்களில் பயிர்களுக்கு சேதம் ஏற்படுத்தி வரும் வெட்டுக்கிளியா இது? உதகையில் பரபரப்பு..!

நீலகிரி: உதகை அடுத்துள்ள காந்தள் பகுதியில் புதிய ரக வெட்டுக்கிளியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


நீலகிரி: உதகை அடுத்துள்ள காந்தள் பகுதியில் புதிய ரக வெட்டுக்கிளியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த புதிய வகை வெட்டுக்கிளி, வட மாநிலங்களில் விவசாய பயிர்களை அழித்து வரும் வெட்டுக்கிளியா? என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்று அச்சம் நீங்குவதற்க்குள் வட மாநிலங்களில் வெட்டுக்கிளியின் ஊடுருவல் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நாளைக்கு 35 ஆயிரம் பேர் உண்ணக்கூடிய பயிர்களை இவை அழித்து வருகின்றது.

இதனிடையே, உதகை அடுத்துள்ள காந்தள் பகுதியில் வியாபாரிகள் வழக்கம் போல் கடைகளை அடைத்து செல்லும் போது கடை வாசலில் ஒரு வெட்டுக்கிளி தென்பட்டுள்ளது. இது வரை கண்டிராத வெட்டுக்கிளி என கருத்தபட்டு உடனடியாக அதனை ஒரு சிறிய பாட்டிலில் அடைத்து மாவட்ட ஆட்சியருக்கு நேரடியாக தொடர்பு கொண்டு வட மாநிலங்களை அச்சுருத்தி வரும் வெட்டுகிளியா என சந்தேகத்தின் அடிப்படையில் தெரிவித்துள்ளனர்.

இதை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் சம்பந்தபட்ட அதிகாரிகளை ஆய்வுக்கு செய்ய அறிவுறித்தியுள்ளார். இது வட மாநிலத்தில் இருந்து பொருட்களை எடுத்து வந்த லாரிகளில் வந்ததா? எனவும் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

இது சாதாரண ரகமான வெட்டுக்கிளியாக கூட இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும் கோவை வேளாண்மை ஆராய்ச்சி மையத்திற்கு இந்த வெட்டுக்கிளி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகளின் ஆலோசனைக்குப் பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...