வால்பாறையில் தங்கும் விடுதிகள் வரும் காலங்களில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை பற்றி கூட்டம்

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளமான வால்பாறைக்கு ஆண்டு தோறும் தமிழகம், கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி மற்றும் வெளி நாடுகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகளின் வசதிக்காக வால்பாறை, ரொட்டிக்கடை மற்றும் சோலையார் அணை பகுதியில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன.

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளமான வால்பாறைக்கு ஆண்டு தோறும் தமிழகம், கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி மற்றும் வெளி நாடுகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகளின் வசதிக்காக வால்பாறை, ரொட்டிக்கடை மற்றும் சோலையார் அணை பகுதியில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன.



இந்நிலையில், தங்கும் விடுதி உரிமையாளர்களுடன், காவல்துறை ஆய்வாளர் மகேஸ்வரி வரும் காலங்களில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை பற்றி விளக்கினார்.

அப்போது பேசிய அவர், சுற்றுலா பயணிகள் வருகை பற்றிய விபரங்களை தங்கும் விடுதி உரிமையாளர்கள் பதிவேடுகளில் கண்டிப்பாக பதியவேண்டும், அவர்களின் விலாசங்கள் மற்றும் மொபைல் எண்கள் பதிவு செய்வதோடு அதன் உண்மைத்தண்மை பற்றி ஆதார் கார்டு மற்றும் ஓட்டினர் உரிமம் நகல் எடுக்கப்பட்டு பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும், என தெரிவித்தார்.



மேலும், தங்கும் விடுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் நடமாடும் பகுதியில் கண்கானிப்பு கேமரா பொருத்தியிருப்பதோடு அதன் பதிவுகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று காவல்துறை ஆய்வாளர் மகேஸ்வரி தங்கும் விடுதி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த கூட்டத்தில் வால்பாறை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி, காவல்துறையினர், 50க்கும் மேற்பட்ட தங்கும் விடுதி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...