திருப்பூரில் இன்று பல இடங்களில் கேட்கப்பட்ட சத்தம் அதிநவீன தேஜஸ் விமானத்தின் சத்தம் - மாவட்ட ஆட்சியர் விளக்கம்

திருப்பூர்: திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை கேட்கப்பட்ட பலத்த சத்தம் சூலூர் விமானப்படையில் புதிதாக சேர்க்கப்பட்ட அதிநவீன தேஜஸ் சூப்பர்சானிக் விமானத்தின் சத்தம் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் விளக்கமளித்துள்ளார்.

திருப்பூர்: திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை கேட்கப்பட்ட பலத்த சத்தம் சூலூர் விமானப்படையில் புதிதாக சேர்க்கப்பட்ட அதிநவீன தேஜஸ் சூப்பர்சானிக் விமானத்தின் சத்தம் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர்

விஜயகார்த்திகேயன் விளக்கமளித்துள்ளார்.

திருப்பூரில் இன்று காலை 10:40 மணியளவில் வெடி வெடித்தது போன்ற பல சத்தம் பல இடங்களில் கேட்டது. இது மக்களை அச்சமடைய வைத்தது.

திருப்பூர் மாவட்டத்தில், காங்கேயம், தாராபுரம், குண்டடம், மூலனூர் மற்றும் காங்கயம் பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியே வந்து பார்த்தனர். நிலநடுக்கம் ஏதும் ஏற்பட்டிருக்கலாமோ எனவும் அச்சம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை கேட்கப்பட்ட பலத்த சத்தம் சூலூர் விமானப்படையில் புதிதாக சேர்க்கப்பட்ட அதிநவீன தேஜஸ் சூப்பர்சானிக் விமானத்தின் சத்தம் எனவும் இதனால், யாரும் பீதி அடைய வேண்டாம் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பாக யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.

Newsletter

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...