கோவை: விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்த மத்திய அரசை கண்டித்து கோவையில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை: விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்த மத்திய அரசை கண்டித்து கோவையில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்ற இலவச மின்சாரத்தை ரத்து செய்ய மத்திய அரசு அறிக்கை பிறப்பித்துள்ளது. இதனை கண்டித்தும் கைவிட கோரி வலியுறுத்தி தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக, கோவை சிவானந்தா காலனி மின்வாரிய அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசின் செயல்பாடுகளை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன கோஷங்களை எழுப்பினர். "காலம் காலமாக நாட்டை காப்பவன் விவசாயி, ஆனால் விவசாயியின் வயிற்றில் அடிப்பது BJP", "ஆசை வார்த்தைகள் கூறி ஓட்டு வாங்கி மோசம் செய்தது மத்திய அரசு" என கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், மத்திய அரசு இலவச மின்சாரத்தை ரத்து செய்ய அறிக்கை பிறப்பித்ததுள்ளது. இதனை உடனடியாக கைவிட வேண்டும் எனவும் விவசாயிகள் தான் இந்த நாட்டை தலைநிமிரச் செய்யும் தூண்களாக செயல்பட்டு வருகின்றனர் எனவும் இதனை கெடுக்க மத்திய அரசு நினைத்து வருகின்றது. இதனை ஒருநாளும் காங்கிரஸ் கட்சி அனுமதிக்காது என தெரிவித்தார்.
ஊரடங்கு காரணமாக ஐந்து பேர் மட்டுமே இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் சமூக இடைவெளி பின்பற்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக தெரிவித்தார். இந்தப் போராட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி, வீனஸ் மணி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.