கோவை: சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து சிகிச்சைக்காக இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவை: சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து சிகிச்சைக்காக இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவையில் உள்நாட்டு விமான போக்குவரத்து நேற்று முதல் துவங்கியது. கோவை விமான நிலையத்திற்கு நேற்று சென்னை, டெல்லி, பெங்களூர் ஆகிய இடங்களில் இருந்து நான்கு விமானங்கள் வந்தன. இவற்றில் மொத்தம் 360 பயணிகள் கோவை வந்தனர். விமான நிலையத்தில் அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டு தனிமை படுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று காலை சோதனை முடிவுகள் தெரியவந்தது.
இதில் விமானம் மூலம் வந்த 300 பேரின் பரிசோதனை முடிவுகள் தொற்று இல்லை என தெரியவந்தது. இதனையடுத்து, அவர்கள் வீடுகளில் 14 நாட்கள் தனிமை படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர்.
இந்நிலையில், சென்னையில் இருந்து கோவை வந்து தனியார் ஓட்டலில் தங்கவைக்கப்பட்டிருந்த 24 வயது இளைஞருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர் சென்னையில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் கோவை வந்திருந்தார். அந்த இளைஞர் உடன் வந்த மற்ற பயணிகளுக்கு தொற்று இல்லாத நிலையில் அவர்களை 14 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
கோவையில் கடந்த 23 நாட்களுக்கு பிறகு தொற்று ஏற்பட்டிருந்தாலும் தொற்று ஏற்பட்ட நபர் சென்னை நோயாளியாக கருதப்பட்டு அங்குள்ள பட்டியலிலேயே அவர் சேர்க்கப்படுவார் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.