செஞ்சேரிமலை அருகே பிஏபி கால்வாயில் நீரை திருடி பயன்படுத்தும் தென்னை நார் தொழிற்சாலைகள் - விவசாயிகள் கவலை

கோவை: கோவை செஞ்சேரிமலை சுற்றுவட்டாரத்தில் தென்னை நார் ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயனம் கலந்த கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யாமலே அருகிலுள்ள குட்டைகளில் எந்த வித அனுமதியுமின்றி தேக்கி வைக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை செஞ்சேரிமலை சுற்றுவட்டாரத்தில் தென்னை நார் ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயனம் கலந்த கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யாமலே அருகிலுள்ள குட்டைகளில் எந்த வித அனுமதியுமின்றி தேக்கி வைக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். 

கோவை மாவட்டம் செஞ்சேரிமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட தென்னை நார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த நார் தொழிற்சாலைகளிலிருந்து தென்னை நார் வெளிநாடுகளுக்கும், பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது.

இந்த தென்னை நார் தொழிற்சாலைகள் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன கால்வாயின் அருகே தோப்புகளை விலைக்கு வாங்கியுள்ளனர். இரவு நேரங்களில் பிஏபி கால்வாயில் இருந்து குழாய் மூலம் தண்ணீரை தங்களது கிணற்றிற்குள் விட்டு திருடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மாவட்ட நிர்வாகம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டினர்.



தென்னை நார் ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயனம் கலந்த கழிவுநீர் சுத்தகரிப்பு செய்யாமலே அருகிலுள்ள குட்டைகளில் எந்த வித அனுமதியுமின்றி தேக்கி வைக்கப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாகவும், குடிநீர் அதிக உப்புத்தன்மையுடன் இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

தென்னை நார் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரை சுத்திகரித்து அனுப்ப பலமுறை சொல்லியும் நிறுவனம் கண்டுகொள்ளாததால் சுற்றுப்புறச்சுழல் சீர்கேடு அடைந்து வருவதால் வாழ தகுதியற்ற ஊராக மாறி வருவதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.

தென்னை நார் ஆலைகளில் இருந்து காற்றின் மூலம் பரவும் கழிவுத்துகள்கள் வீடுகளில் படர்வதால், கடும் அவதிக்கு உள்ளவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனா். மேலும், குழந்தைகள் தென்னை நார் கழிவுத்தூகள்களால் பாதிக்கப்படுவதாக கூறி தன்னுடைய மருமகள்கள் அவர்களது அம்மா வீட்டிற்கு சென்று விட்டதாக வயதான பெண்மணி தெரிவித்தார்.

இப்பகுதி மக்கள் தங்களுக்கு காய்ச்சல், சளி இருமல், ஆஸ்துமா உள்ளிட்ட பிரச்சனைகளை தென்னை நார் தொழிற்சாலைகளால் அடிக்கடி பாதிக்கப்படுவதாக தெரிவித்தார்.

மேலும், செஞ்சேரிமலை சுற்றுவட்டாரத்தில் உள்ள தென்னை நார் ஆலைகளின் விதிமீறல்களை தடுக்க தமிழக அரசு எடுக்க வேண்டுமென விவசாயிகளும், பொது மக்களும் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...