திருப்பூர்: பல்லடம் அருகே உள்ள கடையில் குவியல் குவியலாக போதை மிட்டாய்கள் மற்றும் ஹான்ஸ் பொருட்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்தனர்.
திருப்பூர்: பல்லடம் அருகே உள்ள கடையில் குவியல் குவியலாக போதை மிட்டாய்கள் மற்றும் ஹான்ஸ் பொருட்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்தனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த சின்னக்கரை பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே வட மாநிலத்தவரின் கடையில் போதை மிட்டாய்கள், புகையிலை விற்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து லட்சுமி நகர் பகுதியில் உள்ள வடமாநிலத்தவரின் கடையை தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், அதிரடியாக கடைக்கு சென்ற மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் கேசவராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் கொண்ட குழுவினர் தீவிர சோதனை மேற்கொண்டதில் கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஹான்ஸ் உள்ளிட்ட போதை தரும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

பின்னர் கடையில் இருந்த ஒடிசாவை சேர்ந்த மிரித்தின் ஜே ராவத் மற்றும் பிரசாந்த், ராஜா ஆகிய மூவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் கடைக்கு அருகே தனியாக குடோன் வாடகைக்கு எடுத்து போதை சாக்லேட்கள், ஹான்ஸ் மற்றும் பல்வேறு போதை தரும் பாக்குக்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து குடோனுக்கு சென்று சோதனை மேற்கொண்டதில் குவியல் குவியலாக இருந்த போதை சாக்லெட் உள்ளிட்ட 50 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனையடுத்து குடோன் மற்றும் கடைக்கு சீல் வைத்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பிடிபட்ட மூவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், ஆய்விற்காக பிடிபட்ட பொருட்களின் மாதிரிகளை பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பரிசோதனை முடிவிற்கு பிறகு மூவர் மீதும் கிரிமினல் வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த சின்னக்கரை பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே வட மாநிலத்தவரின் கடையில் போதை மிட்டாய்கள், புகையிலை விற்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து லட்சுமி நகர் பகுதியில் உள்ள வடமாநிலத்தவரின் கடையை தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், அதிரடியாக கடைக்கு சென்ற மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் கேசவராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் கொண்ட குழுவினர் தீவிர சோதனை மேற்கொண்டதில் கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஹான்ஸ் உள்ளிட்ட போதை தரும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
பின்னர் கடையில் இருந்த ஒடிசாவை சேர்ந்த மிரித்தின் ஜே ராவத் மற்றும் பிரசாந்த், ராஜா ஆகிய மூவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் கடைக்கு அருகே தனியாக குடோன் வாடகைக்கு எடுத்து போதை சாக்லேட்கள், ஹான்ஸ் மற்றும் பல்வேறு போதை தரும் பாக்குக்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதனை அடுத்து குடோனுக்கு சென்று சோதனை மேற்கொண்டதில் குவியல் குவியலாக இருந்த போதை சாக்லெட் உள்ளிட்ட 50 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனையடுத்து குடோன் மற்றும் கடைக்கு சீல் வைத்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பிடிபட்ட மூவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், ஆய்விற்காக பிடிபட்ட பொருட்களின் மாதிரிகளை பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பரிசோதனை முடிவிற்கு பிறகு மூவர் மீதும் கிரிமினல் வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.