கோவை: கோவையில் நாயை கட்டி போட்ட போது ஏற்பட்ட தகராறில் கணவரை கத்தியால் குத்தியும், மனைவி மீது சரமாரி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவையில் நாயை கட்டி போட்ட போது ஏற்பட்ட தகராறில் கணவரை கத்தியால் குத்தியும் மனைவி மீது சரமாரி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அடுத்த சிறுமுகை எடுகம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவி(45). இவரது மனைவி சாந்தாமணி. இவர்களது பேரன் முகேஷ் அருகில் வசிக்கும் சேகர் என்பவரது வீட்டில் உள்ள நாயின் கழுத்தில் கயிறு கட்டி அதனை இழுத்துள்ளான்.
இதனை கண்ட சேகரின் மனைவி முகேஷை கண்டித்து கையால் அடித்து உள்ளார். இது குறித்து முகேஷ் தனது தாத்தா-பாட்டியிடம் கூற சேகரின் வீட்டுக்கு சென்றவர்கள் இது தொடர்பாக கேட்ட போது, வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. மேலும் சாந்தாமணி நடவடிக்கை குறித்து அவதூறாக ஷோபனா பேசியதாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த சோபனாவின் உடன்பிறந்த சகோதரர்கள் ரவி மற்றும் ஜெயராஜ் சகோதரிக்கு ஆதரவாக பேசி உள்ளனர். வாக்குவாதம் முற்றவே ஜெயராஜ் தான் வைத்திருந்த கத்தியால் ரவியை குத்தியதுடன் மரகட்டை கொண்டு சாந்தாமணியை தாக்கி உள்ளார். இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
இதே போல், தன்னை பேனா கத்தி கொண்டு தாக்கியதாக சேகர் அளித்த புகாரை பெற்ற போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரவி அளித்த புகாரின் அடிப்படையில் ரவி மற்றும் சேகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சேகரின் மனைவி ஷோபா தலைமறைவாக உள்ளார்.