திருப்பூரில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஊராட்சி மன்ற தலைவரை பணி செய்ய விடாமல் தடுப்பதாக ஆட்சியரிடம் மனு

திருப்பூர்: தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஊராட்சி மன்ற தலைவரை பணி செய்ய விடாமல் தடுப்பதாக வார்டு உறுப்பினர் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.


திருப்பூர்: தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஊராட்சி மன்ற தலைவரை பணி செய்ய விடாமல் தடுப்பதாக வார்டு உறுப்பினர் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் தாராபுரத்திற்கு உட்பட்ட கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்ற தலைவராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் செல்வி. இவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் அதே ஊராட்சி பகுதியில் ஆறாவது வார்டு உறுப்பினராக உள்ள குப்புசாமி என்பவர் பணி செய்ய விடாமல் தடுப்பது, ஊரடங்கு சமயத்தில் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சிக்கு அழைக்கவில்லை என குற்றம்சாட்டி ஊராட்சிமன்ற தலைவர் செல்வியை ஜாதியின் பெயரைச் சொல்லி தரக்குறைவாக பேசியதோடு தாக்க முயற்சித்ததாக செல்வி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.



ஆனால், ஒரு மாத காலமாகியும் குப்புசாமி மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க தலித் கூட்டமைப்பினருடன் வந்திருந்தார். மக்கள் பணி செய்ய வேண்டிய தமக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பு வழங்குவதோடு சாதியின் பெயரை சொல்லி தரக்குறைவாக பேசி தாக்க முயற்சித்த குப்புசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்துள்ளார்.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...