நீலகிரி எல்லைப்பகுதி சோதனைச் சாவடிகளில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று ஆய்வு!

நீலகிரி: நீலகிரி எல்லைப்பகுதி சோதனைச் சாவடிகளில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று ஆய்வு மேற்கொண்டார்.


நீலகிரி: நீலகிரி எல்லைப்பகுதி சோதனைச் சாவடிகளில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று ஆய்வு மேற்கொண்டார்.

கொரோனா வைரஸ் தொற்றால் நான்காவது முறையாக ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதால் மாநில எல்லைகள் மூடிக் கிடக்கின்றன.

இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு கேரள மாநில எல்லையான நாடுகாணி வழியாக ராஜஸ்தான் செல்ல 72 தொழிலாளர்கள் ஒரு லாரியில், கக்கனல்லா பகுதிக்கு வந்தனர். இவர்கள் சோதனைச்சாவடியில் இருந்து மீண்டும் கேரளாவிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

மீண்டும் இதே சோதனை சாவடி வழியாக எட்டு பேர் குஜராத் செல்ல வந்தவர்களையும் காவல்துறையினர் கேரளாவிற்கு திருப்பி அனுப்பினர். இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா நாடுகாணி சென்று சோதனைச்சாவடியில் ஆய்வு மேற்கொண்டார்.



பின்னர் கர்நாடக எல்லையான கக்கனல்லா சோதனை சாவடிக்கு சென்று அங்கும் ஆய்வு மேற்கொண்டு எல்லைப் பகுதியில் அத்துமீறி யாரும் நுழையாமல் தீவிரமாக கண்காணிக்க காவல் துறையினரை அவர் கேட்டுக்கொண்டார்.



மேலும் இங்குள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பழங்குடியின மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது கோட்டாட்சியர் ராஜ்குமார், தாசில்தார் கீதாராணி, வருவாய் ஆய்வாளர் ரமேஷ் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...