கோவை: வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் துவங்கப்பட்டது.
கோவை: வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் துவங்கப்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் சிறுத்தை, புலி, யானை, சிங்கவால் குரங்கு, மான், வரையாடு, கரடிகள், காட்டுப்பன்றி, காட்டெருமை உட்பட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.
ஆனைமலை புலிகள் காப்பக உதவி கள இயக்குநர் மற்றும் மாவட்ட வன அலுவலர் ஆரோக்கியராஜ் சேவியர் உத்தரவின் பேரில் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனச்சரகங்களில் கோடை கால வனவிலங்குகள் கணக்கெடுப்பு பயிற்சி வால்பாறை அட்டகட்டியிலுள்ள வன மேலாண்மை பயிற்சி மையத்தில் நேற்று நடைபெற்றது.
இதனை தொடர்ந்து வால்பாறை வனச்சரகத்திற்குட்பட்ட காடம்பாறை பிரிவு பகுதியில் கணக்கெடுப்பு பணிகள் துவங்கியது. வால்பாறை வனச்சரகர் செந்தில்குமார் மற்றும் வனவர் முனியாண்டி கணக்கெடுக்கும் பணியினை துவக்கி வைத்தனர்.
வன விலங்குகளின் கால் தடங்கள், மரங்களில் உள்ள கீறல்கள், விலங்குகளின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டு குறிக்கப்பட்டது. இந்த பணியில் ஒரு வனவர் 5 ஊழியர்கள் கலந்து கொள்கின்றனர். ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வால்பாறை, மானாம்பள்ளி, டாப்சிலிப், பொள்ளாச்சி வனச்சரகங்களில் கணக்கெடுப்பு இன்று துவங்கி 25ம் தேதி வரை நடைபெறுகிறது.
வனத்துறையினர் 64 குழுக்களாகப் பிரிந்து கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.