உதகையில் உயிருக்கு போராடிய சிறுத்தை குறித்து தகவல் அளித்தும் 3 மணி நேரத்திற்கு மேலாக மருத்துவர்கள் வராததால் வனத்துறையினர் அதிருப்தி!

நீலகிரி: உதகை தாவரவியல் பூங்காவில் பணிபுரியும் ஊழியர்கள் குடியிருப்பு பகுதியில் சுமார் 6 முதல் 7 வயது மதிக்கத்தக்க சிறுத்தை ஒன்று அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில், தகவல் தெரிவித்தும் 3 மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவர்கள் வராததால் வன ஊழியர்கள் அதிருப்தி அடைந்தனர்.


நீலகிரி: உதகை தாவரவியல் பூங்காவில் பணிபுரியும் ஊழியர்கள் குடியிருப்பு பகுதியில் சுமார் 6 முதல் 7 வயது மதிக்கத்தக்க சிறுத்தை ஒன்று அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில், தகவல் தெரிவித்தும் 3 மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவர்கள் வராததால் வன ஊழியர்கள் அதிருப்தி அடைந்தனர்.

உதகை தாவரவியல் பூங்காவை சுற்றிலும் வனப்பகுதி நிறைந்து காணப்படுகிறது. இங்கு காட்டெருமை, கரடி, சிறுத்தை, உள்ளிட்ட வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன.



இந்நிலையில், தாவரவியல் பூங்காவில் பணிபுரியும் ஊழியர்கள் குடியிருப்புக்கு செல்லும் சாலையில் சிறுத்தை ஒன்று உயிருக்கு போராடிக் கொண்டிப்பதை கண்ட இப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.



பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் ஆறு முதல் ஏழு வயது மதிக்கத்தக்க இந்த சிறுத்தை, காட்டெருமை அல்லது பிற விலங்குகளுடன் ஏற்பட்ட மோதலில் பலத்த காயம் ஏற்பட்டு நிலை தடுமாறி கிடப்பதாக தெரிவித்தனர்.

மேலும், மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்து மூன்று மணி நேரத்திற்கு மேலாகியும் யாரும் வராததால் பொது மக்கள் அதிருப்தி அடைந்தனர். பின்னர் வன ஊழியர்கள் வலையின் உதவியுடன் சிறுத்தையை வாகனத்தில் ஏற்றி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...