கேரளாவில் இருந்து பணிக்கு திரும்பும் ஊழியர்களை மருத்துவ பரிசோதனை செய்து தனிமைபடுத்த வேண்டும் - நாம் தமிழர் கட்சியினர் கோவை ஆட்சியரிடம் மனு!

கோவை: கேரளாவில் இருந்து பணிக்கு திரும்பும் ஊழியர்களை மருத்துவ பரிசோதனை செய்து தனிமைப்படுத்தப்பட வேண்டும் என நாம் தமிழர் கட்சியினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: கேரளாவில் இருந்து பணிக்கு திரும்பும் ஊழியர்களை மருத்துவ பரிசோதனை செய்து தனிமைப்படுத்தப்பட வேண்டும் என நாம் தமிழர் கட்சியினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் கேரள மாநிலத்தை சேர்ந்த ஊழியர்கள் ஏராளமானோர் பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில், கேரள மாநிலத்தில் உள்ள ரயில்வே ஊழியர்களை பணிக்கு அழைத்து வர கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து இருந்து கோவைக்கு ஊழியர் சிறப்பு ரயிலானது இயக்கப்படுகின்றது.



இந்த நிலையில், கோவை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் நாம் தமிழர் கட்சியின் மண்டல செயலாளர் தமிழ்செல்வன் தலைமையில் அக்கட்சியினர் கேரளாவில் இருந்து ரயிலில் வரும் அனைத்து கேரள மாநிலத்தை சேர்ந்த ரயில்வே ஊழியர்களுக்கும் முழுமையான கொரோனா பரிசோதனை செய்து அவர்களை பதினைந்து நாட்கள் தனிமைபடுத்தி பின்னர் பணியில் சேர அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர்.

கேரளாவில் இருந்து வருவதால் ரயில்வே ஊழியர்களுக்கு முழுபரிசோதனை நடத்தப்பட வேண்டும் எனவும், ஆனால் அதை செய்யும் திட்டத்தில் தமிழக அரசும், சேலம் ரயில்வே கோட்டமும் இல்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட வில்லை எனில் மீண்டும் கோவையில் கொரோனா பரவல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், தமிழக அரசு இதில் தலையிட்டு கேரளாவில் கோவைக்கு வரும் ரயில்வே ஊழியர்கள் அனைவருக்கும் சோதனை நடத்திட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...