திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பையடுத்து டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில், டோக்கன் முறையில் மதுபானங்கள் விற்பனை துவங்கியது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பையடுத்து டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில், டோக்கன் முறையில் மதுபானங்கள் விற்பனை துவங்கியது.
திருப்பூர் மாவட்டத்தில் 241 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இன்று காலை 10 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.
இந்த நிலையில், பல்லடம் தாலுக்காவிற்குட்பட்ட பகுதிகளில் 21 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் பல்லடம் நகரப்பகுதியில் 2 கடைகளை தவிர்த்து 19 கடைகள் திறக்கப்பட்டன. முன்னதாக நீல நிறத்தில் டோக்கன் வழங்கப்பட்டன.
கடை ஒன்றிற்கு ஒரு மணி நேரத்திற்கு 70 டோக்கன் வீதம் மாலை 5 மணி வரை 500 டோக்கன்கள் வழங்கப்பட உள்ளன.
மேலும் டோக்கன் பெற்றவர்கள் நீண்ட வரிசையில் சமூக இடைவெளி விட்டு முககவசம் அணிந்து மது வாங்கி சென்றனர்.
மேலும் கூட்டம் அதிகம் காணப்படும் கடைகளில் 500 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படும் நிலையில் மீதியுள்ளவர்களுக்கு வழங்கப்படும் டோக்கன்களை மறுதினம் பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.