கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் தொடர்பாக கள ஆய்வுக்குழு அலுவலா்கள் இயக்குநா் புவியியல் மற்றும் சுரங்கத்துறை எ.சரவணவேல்ராஜ் இ.ஆ.ப., அவர்கள், சிட்கோ மேலாண்மை இயக்குநரா ஆர்.கஜலெட்சுமி இ.ஆ.ப., ஆகியோர் தலைமையில், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் தொடர்பாக கள ஆய்வுக்குழு அலுவலா்கள் இயக்குநா் புவியியல் மற்றும் சுரங்கத்துறை எ.சரவணவேல்ராஜ் இ.ஆ.ப., அவர்கள், சிட்கோ மேலாண்மை இயக்குநரா ஆர்.கஜலெட்சுமி இ.ஆ.ப., ஆகியோர் தலைமையில், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி அவர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், கள ஆய்வுக்குழு அலுவலர்கள் தெரிவித்ததாவது:-
கோவை மாநகராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
கொரோனா தடுப்பு பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிற கோவை மாநகராட்சி நிர்வாகத்திற்கும், அலுவலா்களுக்கும் பாராட்டுக்கள். தொடர்ந்து கொரோனா தடுப்பு பற்றி விழிப்புணர்வை மக்களிடையே மேற்கொள்ள வேண்டும். கிருமிநாசினி மருந்து தெளிக்கும் பணிகளையும், தூய்மைப் பணிகளையும் அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து மேற்கொள்வதையும், அனைவரும் முகக்கவசம் அணிவதையும், சமூக இடைவெளியையும் கண்காணித்திட வேண்டும். காவல்துறையினர் சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு பணிகளை விழிப்புடன் மேற்கொள்ள வேண்டும் என கள ஆய்வுக்குழு அலுவலாகள் இயக்குநா புவியியல் மற்றும் சுரங்கத்துறை எ.சரவணவேல்ராஜ் இ.ஆ.ப., அவர்கள், சிட்கோ மேலாண்மை இயக்குநர் ஆர்.கஜலெட்சுமி இ.ஆ.ப., ஆகியோர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் (முத்திரைத்தாள்) ப.காந்திமதி, மாவட்ட வருவாய் அலுவலா் (கலால்) எம்.எஸ்.கலைவாணி அவர்கள், நகர் நல அலுவலர் மரு.சந்தோஷ்குமார், காவல்துறை உதவி ஆணையர் ரமேஷ்பாபு அவர்கள், துணை காவல் கண்காணிப்பாளர் என்.பிரேமானந்தன், துணை இயக்குநர் (சுகாதாரம்) பிஅருணா, மண்டல உதவி ஆணையர்கள் செந்தில்குமாரரத்தினம், டி.ஆர்.ரவி, மகேஷ்கனகராஜ், ஏ.ஜே.செந்தில்அரசன், ம.செல்வன், உதவி நகர் நல அலுவலர் வசந்த் திவாகா், ஒருங்கிணைப்பாளர் தூய்மை பாரதம் திருமால், மக்கள் தொடாபு அலுவலா் ரெ.மதியழகன் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனர்.