கோவை: கோவையில் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணி செய்தவர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவையில் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணி செய்தவர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் பகுதியை சேர்ந்த முத்துகுமார் (28) தனது நண்பரான தர்மேந்திரனுடன் கணபதி பகுதியில் தங்கி உள்ளார்.
இந்த நிலையில், கோவை கணபதி பகுதியில் உள்ள கண்ணாடி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தபோது அந்த கட்டத்தின் உரிமையாளர் ஆனந்தகுமார் மற்றும் லீயோ வின்செண்ட் ஆகியோர் பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் வழங்காமல் வேலை செய்ய சொல்லி உள்ளனர்.
இதில் முத்துகுமார் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள சரவணம்பட்டி காவல் நிலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.