கோவை: கோவையில் கல்லூரி மாணவனிடம் பணம் கேட்டு மிரட்டியதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட போக்குவரத்து காவலரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவையில் கல்லூரி மாணவனிடம் பணம் கேட்டு மிரட்டியதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட போக்குவரத்து காவலரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போத்தனூர் காவல் நிலையத்தில் போக்குவரத்து காவலராக பணியாற்றி வந்தவர் அய்யலு கணேஷ். இவர் சுண்டக்காமுத்தூரில் மனைவி மற்றும் மாமியாரை தாக்கியதாக பேரூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கடந்த டிசம்பர் மாதம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், கடந்த 20 நாட்களுக்கு முன்பு போதைக்கு அடிமையான தனியார் கல்லூரி மாணவன் கஞ்சா வாங்க சென்ற போது அய்யலு கணேஷ் மற்றும் அவரது நண்பர்கள் அவரை மிரட்டி அவரிடம் இருந்து 45,000 பணத்தை பறித்ததாகவும் மேலும் ஒரு லட்சம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
இது குறித்து அந்த மாணவன் தனது பெற்றோரிடம் கூறி உள்ளான். இதனையடுத்து அவர்கள் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட போக்குவரத்து காவலர் அய்யலு கணேஷ் மற்றும் 6 பேரிடம் போலீசார் விசாரணை செய்தனர்.
இதில் தொடர்புடையதாக கூறப்படும் மேலும் மூவர் தலைமறைவாகி உள்ளனர். பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுவது தொடர்பாக குனியமுத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.