கோவை: வால்பாறை நகராட்சியில் கொரோனா தடுப்பு பணியில் களப் பணியில் பணியாற்றி வரும் தூய்மைப்பணியாளர்களுக்கு உள்ளாட்சி மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவையில் இருந்து அனுப்பி வைத்த சமையல் தொகுப்பு மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
கோவை: வால்பாறை நகராட்சியில் கொரோனா தடுப்பு பணியில் களப் பணியில் பணியாற்றி வரும் தூய்மைப்பணியாளர்களுக்கு உள்ளாட்சி மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவையில் இருந்து அனுப்பி வைத்த சமையல் தொகுப்பு மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
வால்பாறை நகராட்சி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் வால்பாறை நகராட்சி ஆணையர் டாக்டர் பவன்ராஜ், வட்டாட்சியர் ராஜா முன்னிலையில் வால்பாறை கூட்டுறவு வங்கி தலைவர் வால்பாறை வீ.அமீது, நகர செயலாளர் மயில்கனேசன் 120 தூய்மை பணியாளர்களுக்கு அமைச்சர் அனுப்பி வைத்த சமையல் தொகுப்பு மற்றும் பாதுகாப்பு உபகரண பொருட்களை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் 120 தூய்மை பணியாளர்கள், நகராட்சி அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.