கோவை: வெளிநாடுகளில் வசிக்கும் தமிழக மக்களை அழைத்து வர அனுமதி அளிக்க வேண்டும் என முதலமைச்சரிடம் பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கோவை: வெளிநாடுகளில் வசிக்கும் தமிழக மக்களை அழைத்து வர அனுமதி அளிக்க வேண்டும் என முதலமைச்சரிடம் பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தற்போது வரை 9718 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, வரும் 17ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் வட இந்தியர்கள் மற்றும் சாலைகளில் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு உணவின்றி தவித்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு மற்றும் தன்னார்வலர்கள் உணவளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மற்ற மாநிலத்தவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு அனுமதி வைக்கப்படுவது போல, விமானம் மற்றும் கப்பல் மூலம் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழக மக்களை அழைத்து வர அனுமதி அளிக்க வேண்டும் என முதலமைச்சரிடம் பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
