கோவையில் மாவட்டத்தில் இதுவரை 7,843 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது - மாவட்ட சுகாதார துறை இணை இயக்குநர்

கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த 9 நாட்களாக கொரோனா புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை எனவும் இதுவரை, கோவையில் மாவட்டத்தில் 7,843 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என கோவை மாவட்ட சுகாதார துறை இணை இயக்குநர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த 9 நாட்களாக கொரோனா புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை எனவும் இதுவரை, கோவையில் மாவட்டத்தில் 7,843 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என கோவை மாவட்ட சுகாதார துறை இணை இயக்குநர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், தொடர்ந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

கோவை மாவட்டத்தில் இதுவரை 146 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கடந்த 9 நாட்களில் 2,952 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், யாருக்கும் பாதிப்பு இல்லை என்று கோவை மாவட்ட சுகாதார துறை இணை இயக்குநர் ரமேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும், கோவை மாவட்டத்தில் இதுவரை 7,843 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். மேலும், கோவையில் 146 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 145 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக கூறினார்.

சமீபத்தில், கொரோனா பாதிப்படைந்த கரும்புக்க்கடை பகுதியை சேர்ந்த பெண்மணி மட்டுமே கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளதாக கூறினார்.

கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் இதுவரை திருப்பூர், கோவை மற்றும் நீலகிரியை சேர்ந்த 256 சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...