கோவை: கோவையில் இருந்து 42 மேகாலயா மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கோவை: கோவையில் இருந்து 42 மேகாலயா மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கொரோனா வைரஸ் ஊரடங்கினால் கோவையில் தங்கி இருந்த வட மாநிலத்தவர்கள் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு சிறப்பு ரயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மேகாலயாவை சேர்ந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்து அனுமதி பெற்றதன் அடிப்படையில் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து 3 தனியார் பேருந்துகள் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கிருந்து அவர்கள் மேகாலயா மாநிலத்திற்கு சிறப்பு ரயில்கள் மூலம் அனுப்பப்பட உள்ளனர். அதற்கான முழு செலவையும் அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் காலையில் உணவு வழஙப்கபட்டது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த பலவிஷா என்பவர் கூறும்போது, தாங்கள் மேகாலயா மாநிலத்திற்கு செல்வதற்காக மேகாலயா மாநில அரசிற்கு விண்ணப்பம் செய்து இருந்ததாகவும் அங்கு கிடைக்கப் பெற்ற அனுமதி கடிதத்துடன் தமிழக அரசிடம் அளித்த விருப்ப விண்ணப்பம் ஆகியன சேர்த்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து பரிசீலனைக்கு பின் சொந்த ஊருக்கு செல்ல அனுமதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
கோவை மாவட்ட நிர்வாகம் தங்களை மேகாலயா செல்வதற்காக இங்கிருந்து சென்னை வரை தனியார் வாகனத்தில் அழைத்து செல்ல உள்ளதாகவும் தங்களுக்கு வேண்டிய உணவு பொருட்கள் போன்றவற்றை அளித்து உதவியதாக தெரிவித்தார். நீண்ட நாட்களுக்கு பின்னர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.