நீட் தேர்வில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க உணவு தங்கும் வசதியுடன் ஏற்பாடு - அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: நீட் தேர்வில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க 10 கல்லூரிகளில் உணவு தங்கும் வசதியுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


சென்னை: நீட் தேர்வில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க 10 கல்லூரிகளில் உணவு தங்கும் வசதியுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பத்தாம் வகுப்பு தேர்வு ஜூன் 1 முதல் 12 ஆம் தேதி வரை தேர்வு நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், மார்ச் 26ம் தேதி நடைபெறவிருந்த பதினோராம் வகுப்பு தேர்வு ஜூன் 2 ஆம் தேதி தேர்வு நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், மார்ச் 24 ஆம் தேதி நடைபெறவிருந்த பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வை எழுத தவறிய 36,842 மாணவர்களுக்கு ஜூன் 4 ஆம் தேதி தேர்வு நடத்தப்படவுள்ளதாக அறிவித்தார்.

மற்ற வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார். தேர்வு எழுதும் மாணவர்ககுக்கு தேவையான அனைத்து சுகாதார வசதிகளும் செய்து தரப்படும் எனவும், பொது போக்குவரத்து தொடங்காதபட்சத்தில் மே மூன்றாவது வாரத்தில் இதுகுறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.

பன்னிரெண்டாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் மே 27ம் தேதி முதல் ஜூன் 9 ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ளதாகவும், பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் ஜூன் 15ம் தேதி முதல் ஜூன் 23ம் தேதி வரையும், பதினோராம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் ஜூன் 11 ஆம் தேதி முதல் ஜூன் 23ம் தேதி வரை நடைபெறும் என அமைச்சர் அறிவித்தார்.

அரசு எச்சரித்தும் தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக பேசிய அமைச்சர், பள்ளி கட்டணம் செலுத்த கோரி பெற்றோர்களை துன்புறுத்தக்கூடாது என அறிவுறுத்தியுள்ளதாகவும், இதனை மீறும் பள்ளிகள் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

நீட் தேர்வில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க 10 கல்லூரிகளில் உணவு தங்கும் வசதியுடன் ஏற்பாடு செய்துள்ளதாகவும் வீட்டிலிருந்து படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக படிக்கவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.



Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...