உதகையில் தனியாரிடம் பணி செய்யும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு கூலி தொகையை அதிகப்படுத்தி தராவிட்டால் வரும் 26ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிப்பு!

நீலகிரி: உதகையில் தனியாரிடம் பணி செய்யும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் கூலி தொகையை அதிகப்படுத்தி தர வேண்டுமெனவும் தவறும்பட்சத்தில் வரும் 26ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


நீலகிரி: உதகையில் தனியாரிடம் பணி செய்யும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் கூலி தொகையை அதிகப்படுத்தி தர வேண்டுமெனவும் தவறும்பட்சத்தில் வரும் 26ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உதகையில் தனியார் மூலம் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு நாளொன்றுக்கு தற்போது 420 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதை 800 ரூபாயாக வழங்க வேண்டும் என கூறினர்.

தற்பொழுது கொரோனா நோய் தொற்றால் நாடு முழுவதும் தூய்மைப் பணியாளர்களின் பணி என்பது மிகவும் சிரமத்துடன் செய்து வருவதாகவும் இதை கருத்தில் கொண்டு தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் பணியை மேற்கொண்டு வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு அவர்களின் இன்னலை புரிந்து தினக்கூலியை அதிகப்படுத்தி தரவேண்டுமென தூய்மைப் பணியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

மேலும், தனியாரில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு தின கூலியை அதிகப்படுத்தி தராத பட்சத்தில் எதிர்வரும் 26ம் தேதி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் அனைவரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...