கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் 1000க்கும் மேற்பட்ட பெரிய சிறிய கடைகள் உள்ளன. இந்த கடைகளின் சார்பாக வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பினருடன் வால்பாறை நகராட்சி ஆணையாளர் டாக்டர் பவன்ராஜ் ஆலோசனை நடத்தினார்.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் 1000க்கும் மேற்பட்ட பெரிய சிறிய கடைகள் உள்ளன. இந்த கடைகளின் சார்பாக வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பினருடன் வால்பாறை நகராட்சி ஆணையாளர் டாக்டர் பவன்ராஜ் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையின் போது வால்பாறை நகராட்சி கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் வால்பாறை வட்ட வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும், கடைகளுக்குள் வரும் வாடிக்கையாளர்களும் முக கவசம் அணிய வற்புறுத்த வேண்டும், மேலும் பொருட்கள் வாங்குவோர் கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் தவறும் கடை உரிமையாளர்கள் மீது நகராட்சி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, நகராட்சி சார்பில் 1000 முக கவசங்களை நகராட்சி ஆணையாளர் பவன்ராஜ் வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பின் செயலாளர் ஷாஜுவிடம் வழங்கினார்.
இந்த கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர் டாக்டர் பவன்ராஜ் சுகாதார ஆய்வாளர் ஜான்சன், வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பு தலைவர் ஜெபராஜ், செயலாளர் ஷாஜு, பொருளாளர் ஜேசுதாஸ், சௌந்தரபாண்டியன், பாபுஜி, சுரேஷ் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.