திருப்பூர்: முடிதிருத்தும் நிலையங்களை திறக்க அனுமதிக்க கோரியும், முடிதிருத்தும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நிவாரணங்களாக தலா ரூ.10 ஆயிரம் வழங்கக் கோரி தமிழ்நாடு சவரத் தொழிலாளர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
திருப்பூர்: முடிதிருத்தும் நிலையங்களை திறக்க அனுமதிக்க கோரியும், முடிதிருத்தும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நிவாரணங்களாக தலா ரூ.10 ஆயிரம் வழங்கக் கோரி தமிழ்நாடு சவரத் தொழிலாளர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மாநில அரசு 34 வகையான தொழில்களுக்கும், தனி கடைகளையும் திறக்க அனுமதி வழங்கியுள்ள நிலையில் கொரோனா ஊரடங்கு காலத்திலிருந்து 50 நாட்களாக கடையை திறக்காமல் ஊரடங்கை பின்பற்றி வருவதாகவும், தமிழ்நாடு சவரத் தொழிலுக்கு மட்டும் தடை நீட்டிப்பதால் திருப்பூர் மாநகரத்தில் 3 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர்.
எனவே, முடிதிருத்தும் நிலையங்களை திறக்க அனுமதிக்க கோரியும், முடிதிருத்தும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நிவாரணங்களாக தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்க கோரியும், தமிழ்நாடு சவரத் தொழிலாளர்கள் சங்கத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.