வால்பாறையில் தொடரும் சிறுத்தை புலிகளின் அட்டகாசம்; மாடு பலி
கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ளமாணிக்காஎஸ்டேட்பகுதியில் சிறுத்தைப்புலிகள் அடித்து மூன்று மாடுகள் பலியாகி உள்ளது.
இந்நிலையில் வால்பாறையை அடுத்துள்ள கருமலை எஸ்டேட்டில் வனராஜ் என்பவரின் மாடு மேய்ச்சலுக்கு சென்று விட்டு கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போய்விட்டது. வனராஜும் நண்பர்களும் இரண்டு தினங்களாக மாட்டை தேடி வந்தனர்.
இந்நிலையில் வால்பாறை கருமலை நெடுஞ்சாலையில் உள்ள தேயிலை தோட்டம் 11ல் மாடு இறந்து கிடந்தது தெரிய வந்தது. மூன்று வயதுடைய சினை மாட்டை புலி கொன்று தின்றுள்ளது தெரிய வந்தது.
வால்பாறை வனச்சரக வனவர் பிரபாகரன் சம்பவ இடத்தை பார்வையிட்டு மாட்டை உடல் கூறு ஆய்வுக்கு ஏற்பாடு செய்தார். மேலும், வனத்துறையினர் புலியின்நடமாட்டம் பற்றிய விவரங்களை சேகரித்து வருகின்றனர். வால்பாறை பகுதியில் சிறுத்தை ப்புலிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது மக்களிடையே அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் வால்பாறையை அடுத்துள்ள கருமலை எஸ்டேட்டில் வனராஜ் என்பவரின் மாடு மேய்ச்சலுக்கு சென்று விட்டு கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போய்விட்டது. வனராஜும் நண்பர்களும் இரண்டு தினங்களாக மாட்டை தேடி வந்தனர்.
இந்நிலையில் வால்பாறை கருமலை நெடுஞ்சாலையில் உள்ள தேயிலை தோட்டம் 11ல் மாடு இறந்து கிடந்தது தெரிய வந்தது. மூன்று வயதுடைய சினை மாட்டை புலி கொன்று தின்றுள்ளது தெரிய வந்தது.
வால்பாறை வனச்சரக வனவர் பிரபாகரன் சம்பவ இடத்தை பார்வையிட்டு மாட்டை உடல் கூறு ஆய்வுக்கு ஏற்பாடு செய்தார். மேலும், வனத்துறையினர் புலியின்நடமாட்டம் பற்றிய விவரங்களை சேகரித்து வருகின்றனர். வால்பாறை பகுதியில் சிறுத்தை ப்புலிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது மக்களிடையே அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.