சாய்பாபா காலனி பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் 500 பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன

கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள பொதுமக்கள் 500 பேருக்கு காய்கறிகளுடன் அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் இன்று வழங்கினார்.

கோவை: கொரோனா பாதிப்பை அடுத்து நாடு முழுவதும் 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த நிலையில் பல்வேறு கட்டுபாடுகளுடன் இயல்பு நிலைக்கு கொண்டு வர தமிழக அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக வருமானமின்றி இருந்த பொதுமக்களுக்கு பல்வேறு தரப்பினர் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். 

இந்த நிலையில் கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள பொதுமக்கள் 500 பேருக்கு காய்கறிகளுடன் அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் இன்று வழங்கினார். 

பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கும் நிகழ்வின்போது காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கணபதி சிவகுமார், விஜயகுமார், ஜெயபால், கார்த்திக் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...