கோவையில் இருந்து உத்தரபிரதேச மாநிலத்திற்கு சிறப்பு ரயில் மூலம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 1140 பேர் அனுப்பி வைப்பு!

கோவை: உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சுமார் 1140 பேர் சிறப்பு ரயில் 06107 மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.


கோவை: உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சுமார் 1140 பேர் சிறப்பு ரயில் 06107 மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

கோவையில் கொரோனா தொற்றால் தொழில்கள் யாவும் முடங்கியுள்ள சூழலில் வேலை இல்லாமலும், சொந்த ஊருக்கு செல்ல முடியாமலும் தவித்து வந்த வட மாநிலத் தொழிலாளர்களை அந்தந்த ஊருக்கு அனுப்பும் பணியில் மாநில அரசு ஈடுபட்டுள்ளது.



அந்த வகையில் கோவை மாவட்டத்தில் கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, பேரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தங்கி வேலை செய்த உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சுமார் 1140 பேரைக் கோவை மாவட்ட நிர்வாகம் தனது சொந்த செலவில் சிறப்பு ரயில் மூலம் டிக்கெட் எடுத்து கொடுத்து, சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.



காவலர்கள் உதவியோடு ரயில் நிலையம் அழைத்து வந்து உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்து 22 பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயிலில் தனி மனித இடைவெளியுடன் அமர வைத்து உணவு, தண்ணீர், முககவசம் உள்ளிட்ட வசதிகளை ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தனர்.

நேற்று இரவு முதல் சிறப்பு ரயில் மூலம் பீகார் மாநிலத்திற்கு வடமாநில தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இன்று காலை 8 மணிக்கு பீகாருக்கு இரண்டாவது ரயிலும் புறப்பட்டுச் சென்றது. தற்போது 4.10 மணிக்கு மூன்றாவது சிறப்பு ரயில் கோவையில் இருந்து கிளம்பியது. மேலும் இன்று இரவு 8 மணிக்கு ஒரு சிறப்பு ரயில் புறப்பட உள்ளது.

Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...