தமிழகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு மத்திய மாநில அரசுகளே முழு பொறுப்பு - சுப்பராயன் எம்பி

திருப்பூர்: தமிழகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு மத்திய மாநில அரசுகளே முழு பொறுப்பு என திருப்பூரில் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: தமிழகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு மத்திய மாநில அரசுகளே முழு பொறுப்பு என திருப்பூரில் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகம் முழுவதுமே கடந்த 10 தினங்களாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாகவும், அதற்கு மத்திய மாநில அரசுகளே முழு பொறுப்பு எனவும், கடந்த மாதம் 29 ஆம் தேதி புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டும் இதுவரை திருப்பூருக்குள் இருக்கும் புலம்பெயர்ந்து தொழிலாளர்களை அழைத்துச் செல்ல ஒரு ரயில் கூட வரவில்லை எனவும் குற்றம்சாட்டினர்.

இதுகுறித்து பலமுறை உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் முறையான பதில் இல்லை என தெரிவித்த அவர், போராடுகின்ற வடமாநில தொழிலாளர்களை அடிப்பதற்கு காவல்துறைக்கு யார் உரிமை கொடுத்தது எனவும் கேள்வி எழுப்பினார்.

மேலும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் இந்த போராட்டமே மத்திய மாநில அரசுகளின் பொறுப்பற்ற தன்மையை காட்டுவதாகவும் ஆளுகின்ற உரிமையை இழந்து விட்ட மத்திய மாநில அரசுகள் பதவி விலக வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...