நீலகிரி: நீலகிரியில் கொரோனா பாதிப்பால் தனிமைப் படுத்தப்பட்டிருந்த நான்கு பகுதிகளும் நாளை முதல் (சனிக்கிழமை) திறந்து விடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நீலகிரி: நீலகிரியில் கொரோனா பாதிப்பால் தனிமைப் படுத்தப்பட்டிருந்த நான்கு பகுதிகளும் நாளை முதல் (சனிக்கிழமை) திறந்து விடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டத்தில் இருந்து கொரோனா தெற்றால் பாதிக்கப்பட்டிருந்த, 13 பேரில், 9 பேர் முழுமையாக குணமாகி வீடு திரும்பினர். ஆனாலும், அவர்கள் குடியிருந்த பகுதிகளான -- உதகையில் காந்தள் பகுதி, குன்னூர் ராஜாஜி நகர், காேத்தகிரி பஜார் மற்றும் எஸ். கைகாட்டிப் பகுதிகள் தனிமைப் படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டது.
இதனைத் தாெடர்ந்து உள்ளே இருந்து யாரும் வெளியே வராத வகையிலும், வெளியில் இருந்து யாரும் உள்ளே புகாத வகையிலும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியினை மேற் காெண்டு வந்தனர்.
தொடர்ந்து, மேற்கொண்ட கண்காணிப்பில் அப்பகுதிகளில் யாருக்கும் எந்த வித பாதிப்பும் இல்லை என்ற நிலையில் சனிக்கிழமை முதல் தனிமைப்படுத்தப்பட்ட இந்த நான்கு பகுதிகளும் நாளை (சனிக்கிழமை) திறந்து விடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஜே இன்னசென்ட் திவ்யா செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் இருந்து கொரோனா தெற்றால் பாதிக்கப்பட்டிருந்த, 13 பேரில், 9 பேர் முழுமையாக குணமாகி வீடு திரும்பினர். ஆனாலும், அவர்கள் குடியிருந்த பகுதிகளான -- உதகையில் காந்தள் பகுதி, குன்னூர் ராஜாஜி நகர், காேத்தகிரி பஜார் மற்றும் எஸ். கைகாட்டிப் பகுதிகள் தனிமைப் படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டது.
இதனைத் தாெடர்ந்து உள்ளே இருந்து யாரும் வெளியே வராத வகையிலும், வெளியில் இருந்து யாரும் உள்ளே புகாத வகையிலும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியினை மேற் காெண்டு வந்தனர்.
தொடர்ந்து, மேற்கொண்ட கண்காணிப்பில் அப்பகுதிகளில் யாருக்கும் எந்த வித பாதிப்பும் இல்லை என்ற நிலையில் சனிக்கிழமை முதல் தனிமைப்படுத்தப்பட்ட இந்த நான்கு பகுதிகளும் நாளை (சனிக்கிழமை) திறந்து விடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஜே இன்னசென்ட் திவ்யா செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.