கோவையில் மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்து மின் மயான சுவற்றில் மோதி விபத்து ஏற்படுத்திய இளைஞர்கள் இருவர் படுகாயம்..!

கோவை: கோவையில் ஆத்துப்பாலம் அருகே மதுபோதையில் அதிவேகமாக வாகனம் ஓட்டி வந்த இளைஞர்கள் கட்டுபாட்டை இழந்து மின் மயான சுவற்றில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் ஆத்துப்பாலம் அருகே மதுபோதையில் அதிவேகமாக வாகனம் ஓட்டி வந்த இளைஞர்கள் கட்டுபாட்டை இழந்து மின் மயான சுவற்றில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 44 நாட்களாக மதுக்கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில் இன்று தமிழகத்தில் பல்வேறு நிபந்தனைகளுடன் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது.

காலை முதலே பல்வேறு பகுதிகளிலும் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் காத்திருந்து குடிமகன்கள் மதுவை வாங்கி செல்கின்றனர்.

இந்நிலையில் இரண்டு இளைஞர்கள் மது அருந்திய நிலையில், பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு அதிவேகத்தில் வந்தவர்கள் குனியமுத்தூர் அடுத்த ஆத்துபாலம் பகுதியில் வந்த போது அதிக போதை காரணமாக வாகன கட்டுபாட்டை இழந்து ஆத்துப்பாலம் மின்மயான சுவற்றில் மோதியுள்ளனர். இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.



இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து குனியமுத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...