கோவை: கோவை அருகே 44 நாட்களுக்கு பிறகு மதுபானக்கடை திறந்த போது கைதட்டி விசிலடித்து மதுபிரியர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
கோவை: கோவை அருகே 44 நாட்களுக்கு பிறகு மதுபானக்கடை திறந்த போது கைதட்டி விசிலடித்து மதுபிரியர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
கோவை மாவட்டம் கிட்டாம்பாளையம் மற்றும் கருமத்தாம்பட்டி பகுதியில் உள்ள மதுபானக்கடைகளில் மது வாங்க கூட்டம் அலை மோதியது. காலை முதலே நீண்ட வரிசையில் மதுபிரியர்கள் காத்திருந்தனர்.
முக கவசம் அணிந்து குடைகளுடன் வந்த மதுபிரியர்கள் தண்ணீர் பாட்டில்களுடன் வரிசையில் நின்றனர்.

வெயில் அதிகமாக இருந்ததால் வரிசையில் குடை, காலி பாட்டில்களை வைத்து இடம் பிடித்தவர்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து மது வாங்கி சென்றனர்.
மேலும், 44 நாட்களுக்கு பிறகு மதுபானக்கடை திறந்த போது கைதட்டி விசிலடித்து மதுபிரியர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.