திருப்பூரில் கொரோனா பரிசோதனை மையம் இரண்டு நாட்களில் துவங்கப்படும் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

திருப்பூர்: திருப்பூரில் கொரோனா பரிசோதனை மையம் இரண்டு நாட்களில் துவங்கப்படும் எனவும் தொழில்துறையினரின் தேவைகளை பூர்த்தி செய்ய 4 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர்: திருப்பூரில் கொரோனா பரிசோதனை மையம் இரண்டு நாட்களில் துவங்கப்படும் எனவும் தொழில்துறையினரின் தேவைகளை பூர்த்தி செய்ய 4 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.



திருப்பூரில் நாளை முதல் ஏற்றுமதி சார்ந்த பின்னலாடை நிறுவனங்கள் செயல்படலாம் என அறிவுறுத்தப்பட்டு இருந்த நிலையில் இன்று மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொழில்துறை அமைப்பினருடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருப்பூர் தொழில் துறை மீண்டும் நல்ல முறையில் செயல்படும் வகையில் அறிவிப்பு வெளியிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பதோடு தொழில் துவங்கும் தொழில் துறையினரின் தேவைகளை பூர்த்தி செய்ய நான்கு பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட உள்ளதாகவும் அதன் மூலம் தொழில்துறையினர் குறைகளை தெரிவிக்கலாம் என்றார்.

மேலும், திருப்பூரில் கொரோனா பரிசோதனை மையம் இரண்டு நாட்களில் துவங்க உள்ளதாகவும் அதன் மூலம் ஒரு நாளைக்கு 210 பேருக்கு பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.



இந்த ஆலோசனை கூட்டத்தில் தொழில்துறையினர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...