கோவை: தற்போது உள்ள தடையை நீக்கி ஆட்டோக்கள் அனைத்தையும் இயக்க அனுமதிக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம்(சிஐடியு) கோரிக்கை விடுத்துள்ளது.
கோவை: தற்போது உள்ள தடையை நீக்கி ஆட்டோக்கள் அனைத்தையும் இயக்க அனுமதிக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம்(சிஐடியு) கோரிக்கை விடுத்துள்ளது.
கோவை மாவட்ட ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம்(சிஐடியு) சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 43 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் ஆட்டோ ஓட்டுனர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.
ரேசன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு 1000 ரூபாயும் நலவாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கு இரு தவணையாக 2000 ரூபாயும் வழங்கப்பட்டது. இதில் நலவாரியத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளதாகவும் நலவாரியத்தில் பதிவு செய்தவர்களில் பலருக்கு பணம் கிடைக்க பெறவில்லை என மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இது குறித்து முதல்வருக்கு மனு அளிக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள படவில்லை எனவும் குறிப்பிட்டு இருந்தனர். வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆட்டோ பர்மிட் எடுத்துள்ள அனைவருக்கும் 15,000 ரூபாய் நிவாரணம் வழங்கிட வேண்டும் எனவும் ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் குடும்பங்களுக்கு நிவாரண தொகையாக 5000 வழங்கிட வேண்டும் எனவும் தற்போது உள்ள தடையை நீக்கி ஆட்டோக்கள் அனைத்தையும் இயக்க அனுமதிக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம்(சிஐடியு) கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.