கோவை: தமிழகத்தில் மேலும் 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3550 ஆக அதிகரித்துள்ளது.
கோவை: தமிழகத்தில் மேலும் 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3550 ஆக அதிகரித்துள்ளது.
அதேசமயம், கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரியில் இன்று புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை. இதன் மூலம் கோவையில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 146 ஆக உள்ளது. மேலும், திருப்பூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 114 ஆக உள்ளது. நீலகிரியில் 9 பேர் கொரோனா இன்று வரை தொற்றுக்கு பாதிப்படைந்துள்ளனர்.
குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 9 பேரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், தொடர்ந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இதனிடையே, தமிழக அரசு நேற்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3550 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் மேலும் 527 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், தமிழகத்தில் இதுவரை 1409 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். அதேசமயம், கொரோனா வைரஸ் பாதிப்பால் இன்று மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது வரை 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேசமயம், கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரியில் இன்று புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை. இதன் மூலம் கோவையில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 146 ஆக உள்ளது. மேலும், திருப்பூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 114 ஆக உள்ளது. நீலகிரியில் 9 பேர் கொரோனா இன்று வரை தொற்றுக்கு பாதிப்படைந்துள்ளனர்.
குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 9 பேரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், தொடர்ந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இதனிடையே, தமிழக அரசு நேற்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3550 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் மேலும் 527 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், தமிழகத்தில் இதுவரை 1409 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். அதேசமயம், கொரோனா வைரஸ் பாதிப்பால் இன்று மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது வரை 31 பேர் உயிரிழந்துள்ளனர்.