கோவை: கோவை, திருப்பூர், நீலகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் 4 பிரிவு பட்டாலியனில் பணியாற்ற்வதற்கு 453 பேர் தகுதி பெற்றுள்ளனர். இந்த நிலையில் 125 காவலர்களுக்கான 15 நாள் பயிற்சி இன்று கோவை காவலர் பயிற்சிப் பள்ளியில் தொடங்கியது.
கோவை: கோவை, திருப்பூர், நீலகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் 4 பிரிவு பட்டாலியனில் பணியாற்ற்வதற்கு 453 பேர் தகுதி பெற்றுள்ளனர். இந்த நிலையில் 125 காவலர்களுக்கான 15 நாள் பயிற்சி இன்று கோவை காவலர் பயிற்சிப் பள்ளியில் தொடங்கியது.
இன்று பறிச்சிக்கு வந்தவர்களுக்கு முன்னதாக கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக காவலர்களுக்கு மருத்துவர்கள் மூலம் தெர்மல் ஸ்கிரீனிங் செய்யப்பட்டது. மேலும், அவர்களுக்கு முகக் கவசங்கள் மற்றும் சானிடைசர்கள் வழங்கப்பட்டன.
15 நாட்கள் பயிற்சிக்குப் பின் காவலர்கள் கோவை, திருப்பூர், நீலகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் பணியமர்த்தப்பட உள்ளனர்.
வழக்கமாக 4வது பட்டாலியன் காவலர்களுக்கு 6 மாதங்கள் வரை பயிற்சி அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக தேர்வு செய்யபட்ட காவலர்களுக்கு 15 நாட்கள் மட்டும் பயிற்சி வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.