வால்பாறையில் 650 வட மாநில தொழிலாளர் குடும்பங்களுக்கு கொரானா நிவாரண உதவி வழங்கிய கஸ்தூரி வாசு எம்எல்ஏ

கோவை: வால்பாறையில் 650 வட மாநில தொழிலாளர் குடும்பங்களுக்கு கொரானா நிவாரண உதவிகளை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு வழங்கினார்.


கோவை: வால்பாறையில் 650 வட மாநில தொழிலாளர் குடும்பங்களுக்கு கொரானா நிவாரண உதவிகளை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு வழங்கினார். 

கோவை மாவட்டம் வால்பாறையில் கொரானா வைரஸ் காரணமாக விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவால் மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

இந்நிலையில், வால்பாறை பகுதியில் அஸ்ஸாம், மேற்கு வங்காளம், ஜார்கன்ட் மாநிலத்தை சேர்ந்த சுமார் 2000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் ஊரடங்கு காரணமாக பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். 



இவர்களுக்கு வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு ஸ்டான்மோர் பகுதியிலுள்ள 450 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள், எண்ணெய் ஆகிய பொருட்கள் வழங்கினார். 



இதனை தொடர்ந்து, சோலையார் எஸ்டேட் பகுதியிலுள்ள 150 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள், எண்ணெய் ஆகிய பொருட்கள் வழங்கினார். ஸ்டான்மோர் தேயிலை தோட்ட மத்திய அலுவலக வளாகத்தில் வால்பாறை வட்டாட்சியர் ராஜன் முன்னிலையில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு துவக்கி வைத்தார். 

இந்நிகழ்வில் தேயிலை தோட்ட தலைமை நிர்வாகி ரஞ்சித் கட்டப்புரம், கூட்டுறவு வங்கி தலைவர் அமீது, நகர செயலாளர் மயில் கணேசன், பொன் கணேஷ், சலாவுதீன் நரசப்பன், கிராம நிர்வாக அலுவலர் வஜய் அமிர்தராஜ் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...