கோவை: வால்பாறையில் 650 வட மாநில தொழிலாளர் குடும்பங்களுக்கு கொரானா நிவாரண உதவிகளை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு வழங்கினார்.
கோவை: வால்பாறையில் 650 வட மாநில தொழிலாளர் குடும்பங்களுக்கு கொரானா நிவாரண உதவிகளை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு வழங்கினார்.
கோவை மாவட்டம் வால்பாறையில் கொரானா வைரஸ் காரணமாக விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவால் மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
இந்நிலையில், வால்பாறை பகுதியில் அஸ்ஸாம், மேற்கு வங்காளம், ஜார்கன்ட் மாநிலத்தை சேர்ந்த சுமார் 2000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் ஊரடங்கு காரணமாக பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

இவர்களுக்கு வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு ஸ்டான்மோர் பகுதியிலுள்ள 450 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள், எண்ணெய் ஆகிய பொருட்கள் வழங்கினார்.

இதனை தொடர்ந்து, சோலையார் எஸ்டேட் பகுதியிலுள்ள 150 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள், எண்ணெய் ஆகிய பொருட்கள் வழங்கினார். ஸ்டான்மோர் தேயிலை தோட்ட மத்திய அலுவலக வளாகத்தில் வால்பாறை வட்டாட்சியர் ராஜன் முன்னிலையில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் தேயிலை தோட்ட தலைமை நிர்வாகி ரஞ்சித் கட்டப்புரம், கூட்டுறவு வங்கி தலைவர் அமீது, நகர செயலாளர் மயில் கணேசன், பொன் கணேஷ், சலாவுதீன் நரசப்பன், கிராம நிர்வாக அலுவலர் வஜய் அமிர்தராஜ் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.