பல்லடம் அருகே நிலவேம்பு கஷாய பொடியுடன் கள்ளச்சாராயம் வாங்கி வந்த வால்பாறை நகராட்சி ஊழியர்கள் 4 பேர் கைது!

திருப்பூர்: பல்லடம் அருகே நிலவேம்பு கஷாய பொடியுடன் கள்ளச்சாராயம் வாங்கி வந்த வால்பாறை நகராட்சி ஊழியர்கள் 4 பேர் கைது மங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர்: பல்லடம் அருகே நிலவேம்பு கஷாய பொடியுடன் கள்ளச்சாராயம் வாங்கி வந்த வால்பாறை நகராட்சி ஊழியர்கள் 4 பேர் கைது மங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த மங்கலம் அருகே மங்கலம் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 



அப்போது, அவ்வழியாக வந்த ஸ்விப்ட் காரை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். காரில் நிலவேம்பு கஷாயம் பொடியும், பிளாஸ்டிக் கவர்களில் 16 லிட்டர் கள்ளச்சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.



இதனையடுத்து, காரில் இருந்த நால்வரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்த மங்கலம் போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். 



விசாரணையில் சரவணன் ஜோதி, செல்வராஜ், மணிகண்டன், அருண் ஆகிய நால்வரும் வால்பாறை நகராட்சியில் பணி புரிந்து வருவதும், கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அவர்கள் ஆத்தூருக்கு நிலவேம்பு கஷாயம் பொடி வாங்க வந்ததும் தெரியவந்தது. பொடி வாங்கிவிட்டு திரும்பி வரும் பொழுது அப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்பது தெரிய வந்தது.

சாராயம் அருந்த ஆசைப்பட்ட அவர்கள் நால்வரும் 16 லிட்டர் சாராயத்தை பிளாஸ்டிக் கவர்களில் வாங்கி வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களை கைது செய்த மங்கலம் காவல் துறையினர் அவர்கள் வந்த காரையும் பறிமுதல் செய்தனர்.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...