திருப்பூர்: பல்லடம் அருகே நிலவேம்பு கஷாய பொடியுடன் கள்ளச்சாராயம் வாங்கி வந்த வால்பாறை நகராட்சி ஊழியர்கள் 4 பேர் கைது மங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர்: பல்லடம் அருகே நிலவேம்பு கஷாய பொடியுடன் கள்ளச்சாராயம் வாங்கி வந்த வால்பாறை நகராட்சி ஊழியர்கள் 4 பேர் கைது மங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த மங்கலம் அருகே மங்கலம் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக வந்த ஸ்விப்ட் காரை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். காரில் நிலவேம்பு கஷாயம் பொடியும், பிளாஸ்டிக் கவர்களில் 16 லிட்டர் கள்ளச்சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, காரில் இருந்த நால்வரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்த மங்கலம் போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் சரவணன் ஜோதி, செல்வராஜ், மணிகண்டன், அருண் ஆகிய நால்வரும் வால்பாறை நகராட்சியில் பணி புரிந்து வருவதும், கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அவர்கள் ஆத்தூருக்கு நிலவேம்பு கஷாயம் பொடி வாங்க வந்ததும் தெரியவந்தது. பொடி வாங்கிவிட்டு திரும்பி வரும் பொழுது அப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்பது தெரிய வந்தது.
சாராயம் அருந்த ஆசைப்பட்ட அவர்கள் நால்வரும் 16 லிட்டர் சாராயத்தை பிளாஸ்டிக் கவர்களில் வாங்கி வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களை கைது செய்த மங்கலம் காவல் துறையினர் அவர்கள் வந்த காரையும் பறிமுதல் செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த மங்கலம் அருகே மங்கலம் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக வந்த ஸ்விப்ட் காரை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். காரில் நிலவேம்பு கஷாயம் பொடியும், பிளாஸ்டிக் கவர்களில் 16 லிட்டர் கள்ளச்சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, காரில் இருந்த நால்வரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்த மங்கலம் போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் சரவணன் ஜோதி, செல்வராஜ், மணிகண்டன், அருண் ஆகிய நால்வரும் வால்பாறை நகராட்சியில் பணி புரிந்து வருவதும், கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அவர்கள் ஆத்தூருக்கு நிலவேம்பு கஷாயம் பொடி வாங்க வந்ததும் தெரியவந்தது. பொடி வாங்கிவிட்டு திரும்பி வரும் பொழுது அப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்பது தெரிய வந்தது.
சாராயம் அருந்த ஆசைப்பட்ட அவர்கள் நால்வரும் 16 லிட்டர் சாராயத்தை பிளாஸ்டிக் கவர்களில் வாங்கி வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களை கைது செய்த மங்கலம் காவல் துறையினர் அவர்கள் வந்த காரையும் பறிமுதல் செய்தனர்.