கோவை: வால்பாறையில் காட்டெருமை தாக்கி தொழிலாளி படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
கோவை: வால்பாறையில் காட்டெருமை தாக்கி தொழிலாளி படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறையிலுள்ள சோலையார் அணையை ஒட்டியுள்ள பகுதியில் உள்ளது முருகாளி எஸ்டேட். இங்கு 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்த எஸ்டேட்டைச் சேர்ந்தவர் அலெக்ஸ்(37). இவர் தேயிலை தோட்ட சாலையில் சென்று கொண்டிருந்தபோது புதர் மறைவிலிருந்து திடீரென காட்டெருமை ஒன்று தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அலெக்ஸ் படுகாயத்துடன் தரையில் விழுந்தார்.
இதையடுத்து, அலெக்ஸின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இரத்த வெள்ளத்தில் கிடந்த அலெக்ஸை தோட்ட மருத்துவமனைக்குக் கொண்டு வந்து சேர்த்தனர்.

அங்கு முதலுதவிக்கு பின் வட்டார வள மைய தலைமை மருத்துவர் பாபு லக்ச்மன் ஆலோசனையின் படி பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அலெக்ஸ் கோவைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மானாம்பள்ளி வனச்சரகர் நடராஜன் தலைமையில் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறையிலுள்ள சோலையார் அணையை ஒட்டியுள்ள பகுதியில் உள்ளது முருகாளி எஸ்டேட். இங்கு 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்த எஸ்டேட்டைச் சேர்ந்தவர் அலெக்ஸ்(37). இவர் தேயிலை தோட்ட சாலையில் சென்று கொண்டிருந்தபோது புதர் மறைவிலிருந்து திடீரென காட்டெருமை ஒன்று தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அலெக்ஸ் படுகாயத்துடன் தரையில் விழுந்தார்.
இதையடுத்து, அலெக்ஸின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இரத்த வெள்ளத்தில் கிடந்த அலெக்ஸை தோட்ட மருத்துவமனைக்குக் கொண்டு வந்து சேர்த்தனர்.

அங்கு முதலுதவிக்கு பின் வட்டார வள மைய தலைமை மருத்துவர் பாபு லக்ச்மன் ஆலோசனையின் படி பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அலெக்ஸ் கோவைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மானாம்பள்ளி வனச்சரகர் நடராஜன் தலைமையில் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.