வால்பாறையில் காட்டெருமை தாக்கி தேயிலைத் தோட்ட தொழிலாளி படுகாயம்

கோவை: வால்பாறையில் காட்டெருமை தாக்கி தொழிலாளி படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோவை: வால்பாறையில் காட்டெருமை தாக்கி தொழிலாளி படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 

கோவை மாவட்டம் வால்பாறையிலுள்ள சோலையார் அணையை ஒட்டியுள்ள பகுதியில் உள்ளது முருகாளி எஸ்டேட். இங்கு 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்த எஸ்டேட்டைச் சேர்ந்தவர் அலெக்ஸ்(37). இவர் தேயிலை தோட்ட சாலையில் சென்று கொண்டிருந்தபோது புதர் மறைவிலிருந்து திடீரென காட்டெருமை ஒன்று தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அலெக்ஸ் படுகாயத்துடன் தரையில் விழுந்தார். 

இதையடுத்து, அலெக்ஸின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இரத்த வெள்ளத்தில் கிடந்த அலெக்ஸை தோட்ட மருத்துவமனைக்குக் கொண்டு வந்து சேர்த்தனர். 



அங்கு முதலுதவிக்கு பின் வட்டார வள மைய தலைமை மருத்துவர் பாபு லக்ச்மன் ஆலோசனையின் படி பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 



இதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அலெக்ஸ் கோவைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மானாம்பள்ளி வனச்சரகர் நடராஜன் தலைமையில் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...