கோவை: கோவை அரசு மருத்துவமனையுடன் இணைந்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் சார்பில் இரத்த தான முகாம் நடைபெற்றது.
கோவை: கோவை அரசு மருத்துவமனையுடன் இணைந்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் சார்பில் இரத்த தான முகாம் நடைபெற்றது.
அரசு மருத்துவமனையில் ரத்த பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் தவிர்க்க முடியாத அறுவை சிகிச்சைகளுக்கு இரத்தம் தேவைப்படுகிறது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ரத்த தானம் செய்கிற சமூக ஆர்வலர் கள் வெளியில் வர இயலாத நிலையில் இரத்த பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மேதின நாளில் உதிரம் கொடுத்து உயிர்களை காப்போம் என்கிற நோக்கத்துடன் சிறப்பு இரத்த தான முகமை நடத்தினர்.
கோவை அரசு மருத்துவமனையுடன் இணைந்து மாதர் சங்கத்தினர் நடத்திய இம்முகாம் ஆவரம்பாளையம் பகுதியில் நடைபெற்றது. முகாமில் ஏராளமான பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்று ரத்த தானம் செய்தனர்.
இம்முகாமை மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராதிகா, பொருளாளர் ஜோதிமணி மற்றும் பங்கஜவல்லி, மரகதம் உள்ளிட்ட நிர்வாகிகள் ஒருங்கினைத்தினர்.
இதேபோல, காரமடை பகுதியில் மாதர் சங்கத்தினர் நடத்திய ரத்த தான முகமில் மாதர் சங்க மாநில குழு உறுப்பினர் ராஜலட்சுமி மற்றும் மெகபுனிசா, ஜீவாமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆவரம்பாளையத்தில் 60 யூனிட் ரத்தமும், காரமடையில் 40 யூனிட் ரத்தம் என 100 யூனிட் ரத்தம் இம்முகாம்களில் சேகரிக்கப்பட்டது.
அரசு மருத்துவமனையில் ரத்த பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் தவிர்க்க முடியாத அறுவை சிகிச்சைகளுக்கு இரத்தம் தேவைப்படுகிறது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ரத்த தானம் செய்கிற சமூக ஆர்வலர் கள் வெளியில் வர இயலாத நிலையில் இரத்த பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மேதின நாளில் உதிரம் கொடுத்து உயிர்களை காப்போம் என்கிற நோக்கத்துடன் சிறப்பு இரத்த தான முகமை நடத்தினர்.
கோவை அரசு மருத்துவமனையுடன் இணைந்து மாதர் சங்கத்தினர் நடத்திய இம்முகாம் ஆவரம்பாளையம் பகுதியில் நடைபெற்றது. முகாமில் ஏராளமான பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்று ரத்த தானம் செய்தனர்.
இம்முகாமை மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராதிகா, பொருளாளர் ஜோதிமணி மற்றும் பங்கஜவல்லி, மரகதம் உள்ளிட்ட நிர்வாகிகள் ஒருங்கினைத்தினர்.
இதேபோல, காரமடை பகுதியில் மாதர் சங்கத்தினர் நடத்திய ரத்த தான முகமில் மாதர் சங்க மாநில குழு உறுப்பினர் ராஜலட்சுமி மற்றும் மெகபுனிசா, ஜீவாமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆவரம்பாளையத்தில் 60 யூனிட் ரத்தமும், காரமடையில் 40 யூனிட் ரத்தம் என 100 யூனிட் ரத்தம் இம்முகாம்களில் சேகரிக்கப்பட்டது.