கோவை: கோவை உக்கடம் பகுதியில் மழை நீரில் மின்சாரம் கசிந்த நிலையில், துணி காயப்போடச் சென்ற பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை உக்கடம் பகுதியில் மழை நீரில் மின்சாரம் கசிந்த நிலையில், துணி காயப்போடச் சென்ற பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை உக்கடம் கோட்டைமேடு லட்சுமி நாயக்கர் வீதியை சேர்ந்தவர் அலாவுதீன்(42) பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஜொகரா(வயது 37). இத்தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இன்று அதிகாலை கோவையில் பலத்த மழை பெய்தது.
இந்நிலையில், ஜொகரா காலை 5 மணியவில் துணி காயப்போட சென்றுள்ளார். அந்த பகுதியில் மின்சார வயர்கள் குறுக்கும் நெடுக்குமாக தொங்கிக்கொண்டு இருந்த நிலையில் மழை நீரினில் மின்சாரம் கசிந்துள்ளது. இதனை அறியாமல் துணி காயப்போட்ட ஜொகரா மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு மூர்ச்சையற்று கிடந்தார்.
இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த உக்கடம் போலீசார் மற்றும் தெற்கு வட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர். குறுக்கும், நெடுக்குமாக செல்லும் மின் வயர்களை ஒழுங்குபடுத்துமாறு மின்வாரிய ஊழியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் கோட்டைமேடு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.